உத்தம வில்லன் - கதையும் பாடலும்!


(கொஞ்சம் பொறுமையோட படிச்சீங்கன்னா, கதையையும் கீழே சொல்லியிருக்கேன்!)

முகம்மது கிப்ரான் (சிங்கைத் தொடர்புக்கு விக்கியை நோக்குக!)   'வாகை சூட வா'வில் 'இதாரு?' என்று பார்க்க வைத்தார்.

பிறகு  'வத்திக்குச்சி'யில் 'அம்மா wake me' மற்றும் 'அறி அறி உன்னை' (மற்றொரு சிங்கை கனெக்‌ஷன் - ஷபீர்) வழியாக 'இதப் பார்றா?' என்று நிமிர்ந்து உட்கார வைத்தார்.

இப்போது உத்தம வில்லன்!

சின்ன வயது இளையராஜாவைக் கேட்பது போல் இருந்தது என்று சொல்வதே போதும். மகுடத்தில் சிறகு.

முதல் பாடல் 'சிங்கிள் கிஸ்ஸே லவ்வா' என்று ஆங்கிலமாக ஆரம்பித்தது ஒரு நல்ல சிவப்பு கொய்மீன் (அதாங்க, red herring). 

அதன் பிறகு, திகட்டத் திகட்டத் தமிழ் 
ஓடுகிறது, 
      ஆடுகிறது,
               கொட்டுகிறது, 
                       கொஞ்சுகிறது, 
                               மிஞ்சுகிறது, 
                                         மிரட்டுகிறது.

இரணியன் நாடகம், முத்தரசன் கதை, உத்தமன் கதை என்று அடுத்தடுத்து விடாமல் இசை மழை - நன்றி ஸோஃபியா ஒத்திசைக் குழு

Especially, the coda towards the end of 'Iraniyan kadhai' a-la Broadway musical was superb!

பாடல் வரிகள் அனைத்தும் கமல் - வில்லுப்பாட்டு தவிர - சுப்பு ஆறுமுகம் ஐயா!

ஒரு பானை சோற்றுக்கு இரண்டாக...

1. அந்தாதி வரிகளாய் வந்த 'சாகாவரம்' பாடலில் முத்தாய்ப்பாக - 


வாழும் நாளில் கடமை செய்ய செய்யுள் போல் ஒரு காதல் வேண்டும்

2. இரணியன் நாடகத்தில் இரணியன் பிரகல்லாதனிடம் கேட்கிறான்...


எம் அந்தணர் சொல் கேளாதுஉன் மனம் போல் நீ ஜபித்த பெயர்நாத்திகம் அன்றோ, பிள்ளாய்!...இரணியன் மகனே மதம் மாறுவதா?

If there is anything more ironically delightful...

*****

இப்ப நம்ம கதை ரீலு எப்புடின்னு பார்ப்போம்.


  • மனோரஞ்சன் தற்கால சூப்பர் ஸ்டார்.
  • மனைவி, (ஊர்வசி) மக்கள், மாமனார் (கே விஸ்வநாத்), ஆசான்/இயக்குனர் (கே பாலச்சந்தர்).
  • மனைவிக்கு திடீரென்று உடம்பு சரியில்லாமல் போய்விடுகிறது. சாகக் கிடக்கிறார்.
  • அவருக்காக கமல் தன் டைரக்டரிடம் போய், 'என் மனைவிக்காக, அவள் நினைவுக்காகச் சாகாவரம் கொண்ட ஒரு படம் பண்ண வேண்டும்'. Let us do an eighth century story about a guy who is supposed to have conquered death - உத்தமன். 
  • இது நடக்கும் போது, ஒரு சில காரணங்களால் மனைவியை விட்டு, குடும்பத்தை விட்டு, இன்னொரு பெண்ணின் பின் போய் - probably there is a kidney/organ donation to one of the Parvathis who is probably Jayaram's daughter...and did I say that Andrea is the sexy Dr Aparna? 
  • மொத்தத்தில் வில்லனைப் போல் நடிக்க...

உத்தம வில்லன்!

என்னடா, கதை இவ்வளவு சொதப்பலாக இருக்கிறதே என்று கேட்டால், that is standard Kamal-fare. Raise the expectations to the sky and show you the three-storey building.

But beyond that, the little "big" things that Kamal puts in, those are what make one yearn for his movies. I am open to be surprised and educated!

*****

சிங்கைப் பள்ளிகளில் இப்பாடல்களில் பல தமிழ்ப் பாடங்களாக வருவதற்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன.

தமிழகத்தில்... (பெருமூச்சு!)

முதலில் விஸ்வ ஹிந்து பரிஷத் தொடங்கிவிட்டது. அடுத்து இந்து முன்னணி. 

ஆஹா! எங்கள் கடவுளை இழிவு படுத்திவிட்டாய்!

விஸ்வரூபமாகட்டும், உத்தம வில்லன் ஆகட்டும், ஒரு பாட்டோ, வசனமோ கடவுளை இழிவுபடுத்துகிறது; உணர்வுகள் பாதிக்கப் படுகின்றன என்று கூறினால், அதைவிட அந்தக் கடவுளுக்கு வேறொரு அவமானம் இருக்க முடியாது.

*****

Really intrigued as usual. Hope not to be disappointed.
May 1st, it shall be!

Comments